- Back to Home »
- தமிழகம் »
- தூத்துக்குடி ஸ்டர்லைட் முதல் கொங்கு மண்டல கெயில் எரிவாயு குழாய் வரை..வை.கோ.
Posted by : தமிழ் வேங்கை
வைகோவை ஏன் தலைவனாய்
ஏற்றுக்கொண்டோம் ?????
தூத்துக்குடி ஸ்டர்லைட் காப்பர் ஆலை வெளியிடும் மாசு கழிவுகளை
எதிர்த்து சுமார் 17 வருடங்களுக்கு முன்பே வழக்கு தொடுத்து
தானே வாதாடி வழக்கை வென்றெடுத்தார் வைகோ...
வைகோ எங்களை சாலைகளை மரிக்க சொன்னார்
கேரளாக்காரன் அணையை உடைத்து நம் விவசாய பகுதிகளை சுடுகாடாக்க எண்ணிய
போது...நாங்கள் கேரளத்திற்கு செல்லும் சாலைகளை மறித்தோம்..கைதானோம் !!!!! முல்லை
பெரியாரின் நதிநீர் உரிமைகளை இழக்க நேர்ந்த பொது நெஞ்சம் நிமிர்ந்து போராட்ட
களத்தினை தேனியில் அமைத்தார் எங்களையும் அழைத்தார் போராட்டத்தில் வெற்றியும்
கண்டார்
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டத் திட்டமிட்டுள்ள அணைப்
பகுதிக்கு கேரள அரசை எதிர்த்து எங்களை ஒன்றுகூட சொன்னார் நாங்களும்
கூடினோம்...வைகோவோடு நாங்களும் கைதானோம் !!!
www.tamilveangai.blogspot.com
வைகோ எங்களை சாஞ்சிக்கு கூப்பிட்டார்... ராஜபக்க்ஷேவின் வருகையை
கண்டித்து பயணமானோம்... இரவு பகலெல்லாம் சாலையிலேயே உண்டோம்...தூங்கி
எழுந்தோம்...வரலாறு காணாத போராட்டத்தை தலைவனோடு செய்துவிட்டு..தமிழனுக்கு சூடு
சுரணை இருக்கிறது என்பதை சூளுரைத்துவிட்டு வந்தோம் !!!!
கூடன்குள அணுமின் நிலையம் பற்றி அன்றே பாராளுமன்றத்தில் பிரதமர்
ராஜீவ் காந்தியை எதிர்த்து கார சார விவாதத்தில் ஈடுபட்டார் எங்களை கூடங்குளம்
அணுஉலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையை முற்றுகையிட
சொன்னார்....முற்றுகையிட முயன்று கைதானோம் !!!
வைகோ...குடிபோதையால் பாழ்பட்டு கிடக்கும் தமிழகத்தை நல்வழிக்கு
கொண்டுவர தன்னுடன் மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு கூப்பிட்டார்...கால் கடுக்க
நடக்கவேண்டும் என்று தெரிந்தே ஊர் முழுக்க அவருடன் நடந்தோம் !!!!
வைகோ எங்களை திருப்பதி செல்லுமாறு கட்டளையிட்டார்...
தலைவன் இல்லாமலேயே திருப்பூர் சு.துரைசாமி தலைமையிலே கட்டுபாட்டோடு
கூடினோம்... இன எதிரி ராஜபக்க்ஷேவிற்கு மரண பயம் காட்டி கைதானோம் ...சிங்களவனின்
முகத்தில் பயத்தை பார்த்த வெற்றியோடு ஊர் திரும்பினோம்.. ஆனால் தலைவன் டெல்லியில்
பிரதமர் வீட்டை நோக்கி பேரணி திரட்டினார்...
இப்போது கெயில் எரிவாயு குழாய் பதிக்க கொங்கு மண்டலக் காடு
தோட்டங்களையும் மக்களின் வாழ்வாதாரமான விலை நிலங்களையும் கூண்டோடு குழி தோண்டி
புதைக்க முற்படும் பொது விவசாயிகளையும் விளைநிலங்களையும் காக்க போராட்டக் களம்
அமைக்கப் போகிறார் ஈரோட்டில்....
இந்த தலைவன் எங்களை என்றும் தன் சொந்த நலனுக்காக போராட கூப்பிட்டதில்லை....!!!
இந்த தலைவன் தன்னை சுகமாக வைத்துக்கொள்ள எங்கள் முதுகின் மீது சவாரி
செய்ததில்லை மாறாக எங்களை அவர் தூக்கி சுமக்கிறார்....!!
இந்த தலைவன் எங்களை எப்போதும் வன்முறை போராட்டங்களில்
ஆட்படுத்தியதில்லை ....!!!
இந்த தலைவன் பொதுமக்கள் முகம் சுழிக்கும்படியான எந்த காரியத்திலும்
எங்களை ஈடுபடுத்தியதில்லை !!!
இந்த தலைவன் எங்களை சாதிவாரியாக பிரித்து பார்த்து அளவிடுவதில்லை
!!!
இந்த தலைவன் எங்களை நடக்கவைத்துவிட்டு தான் மட்டும் காரில் சுகமாய்
பயணித்ததில்லை !!!
இந்த தலைவன் எங்களை பசியோடு இருக்கவைத்துவிட்டு..தனியே உண்டதில்லை...!!!!
இந்த தலைவன் சுயமரியாதையை இழக்க செய்து ..அவரின் காலில் எங்களை விழ
வைத்ததில்லை....!!!
இந்த தலைவன் போராட்டங்களின் போது முதலில் கைதாவார்....
அனால் எப்போதும் கடைசியில் மட்டுமே விடுதலையாவார் !!!!
இந்த தலைவன் எங்களை மதிக்க மறந்ததில்லை !!!
இந்த தலைவன் தன் குடும்ப உறுப்பினர்களை எங்கள் மேல் சவாரி போக
வைத்ததில்லை !!!
இந்த தலைவனே எங்களுக்கு தமிழின உணர்வுகளை தன சொல்லாலும் செயலாலும்
தினமும் எங்களுக்கு ஊட்டுகிறார் !!!
இந்த தலைவன் எங்களுக்காய் சிந்திக்க கூடியவர் !!!
இந்த தலைவன் தியாகம் செய்த தொண்டர்களின் படத்தை வீட்டில் மாட்டி
வைத்து மரியாதை செய்பவர் !!!
இந்த தலைவன் அதிகாரத்தில் இருந்த போதும் ஊழல் செய்து பொருள்
சேர்க்கவில்லை !!!
இந்த தலைவன் மட்டுமே அண்ணா பெரியார் கொள்கைகளை தன்னகத்தே
வைத்திருக்கிறார்...!!!
இந்த தலைவன்தான் சுய ஒழுக்கத்தில் எங்களுக்கு ஆசான் !!!
இந்த தலைவன் செல்வ சீமாட்டியின் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்
எளிமையை துறந்ததில்லை !!!
இந்த தலைவன் பெரிதாய் மக்களிடம் இருந்து எந்த சௌகரியத்தையும்
பெற்றுவிடவில்லை...ஆனாலும் இந்த மக்களுக்காகவே தினமும் உழைத்து உழைத்து வாழ்கிறார்
!!!
இந்த தலைவனை தொடர்வதால் நேர்மையான இயக்கத்தில் இருப்பதை எண்ணி
நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறோம் !!!!
எந்த கூட்டணியிலிருந்தாலும் எங்கள் கொள்கைகளை கசப்போடு
விட்டுக்கொடுத்ததில்லை !!!
மக்கள் காரி துப்பி...வயிரெறிந்து சாபமிடும் இயக்கத்தில் நாங்கள்
இல்லை...!!!
எங்கள் கை காசை போட்டு மக்களுக்காக தினம் தினம் போராடுகிறோம்
இனி இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை....!!!
இந்த தலைவனுக்கு ....தலைவனுக்குரிய தகுதியுள்ளது !!!
இவர்தான் எங்கள் தலைவர் !!!! இவர்தான் எங்கள் வழிகாட்டி !!!
என்றும் மறுமலர்ச்சி பாதையில்...
இத்தனை செய்த என் காவியத் தலைவனுக்கு நான் என்ன கைமாறு செய்யப்
போகிறேன் என்று தெரியாமல் என் நெஞ்சம் அரிக்கிறது....
இப்போது தெரிந்து கொண்டேன் தமிழகம் மறுமலர்ச்சிப் பாதையை நோக்கி
பயணிப்பதை...
இனி வரும் காலம் எங்கள் வைகோவின் காலம்...
உயிர் உள்ள வரை உன்னோடு என
வைகோவின் பாசறைக் கழகக் கண்மணிகள்....
தூத்துக்குடி ஸ்டர்லைட் காப்பர் ஆலை வெளியிடும் மாசு கழிவுகளை எதிர்த்து சுமார் 17 வருடங்களுக்கு முன்பே வழக்கு தொடுத்து தானே வாதாடி வழக்கை வென்றெடுத்தார் வைகோ...
வைகோ எங்களை சாலைகளை மரிக்க சொன்னார்
----பிரகாஸ் சுப்பையா