- Back to Home »
- கவிதை »
- சத்தியத்தை இலட்சியமாக்குவோம்..
Posted by : தமிழ் வேங்கை

தாயகத்தை நிச்சயமாக்குவோம்....!!!!
பதுங்குவதும்
பாய காத்திருப்பதும்
பாயும் புலிகளின்
வாடிக்கையடா
பதுங்கி இருந்து
பாய்ந்து வெடித்து
பகை அழித்தகதை
பல உள்ளன
மானம் புதைந்து
வேகம் கலைந்து
கால்கள் களைத்து
நெஞ்சம் எரிந்து
வீரம் வீழ்ந்துவிடவில்லையடா
வேங்கைகளுக்கு
புயல்களின்
பிள்ளைகள்தான்
எங்கள் புலிமறவர்...!
சத்தியத்தை இலட்சியமாக்கி
தாயகத்தை நிச்சயமாக்க
மீண்டும்...
புதிதாய் முளைவிட்டு
புயலாய் புறப்பட்டு
புலியாய்ப் பாய்வார்கள்..!
ஆகையினால்
பகையே...
இனியும் ஆடாதே
சோதனைகள் பல கடந்து
வேதனை பல சுமந்து
சாதனைகள் பல செய்து
சரித்திரம் படைக்கும்
இலட்சியத்துடன்
சாக துணிந்த வேங்கைகள்
ஈழதாகத்தை சுமந்து
வருவார்கள்
எங்கள் சோகத்தை துடைத்து
வெல்வார்கள்!!!!
.ஈழ மைந்தன்.
பாய காத்திருப்பதும்
பாயும் புலிகளின்
வாடிக்கையடா