- Back to Home »
- கவிதை »
- வேர் அறுந்த மரமாக ---ஈழ மைந்தன்.
Posted by : தமிழ் வேங்கை
ஆறரை கோடி பேர்
இருந்தும்
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை
செம்மொழி என்ற பெயர் இருந்தும்
சிந்தும் குருதிக்கு பதில் இல்லை
வேர் அறுந்த மரமாக
நாதியற்று கிடக்கின்றோம்
பார்பதற்கு யாரும் இல்லை
பாலூட்டவும் தாயும் இல்லை
நேற்று வரை அரகில் இருந்த
நேசங்கள் யாரும் இல்லை
பாசம் வைத்து பழகிய
ஆசை சொந்தங்கள் யாரும் இல்லை
ஏன் எமக்கு இந்த வேதனை
இதுவா இந்த உலகத்தின் சாதனை
கண்ணீர் மட்டுமே எங்களின் சொத்தா
கவலைகள மட்டுமே கடவுளின் பரிசா
அழுவது மட்டுமே எங்களின் விதியா
அனைத்துமே அண்டைநாடுகளின் சதியா
எங்கள் துயரங்கள் எப்போது முடியும்
எங்கள் வாழ்வு என்று மலரும்
விடை இல்லா கேள்விகளுடன்
எங்கள் வாழ்வு நீள்கின்றது
விதி விட்ட பாதையிலே
எங்கள் பயணமும் தொடர்கின்றது
!!!!!!!!!!..........ஈழ மைந்தன்
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை
செம்மொழி என்ற பெயர் இருந்தும்
சிந்தும் குருதிக்கு பதில் இல்லை
வேர் அறுந்த மரமாக
நாதியற்று கிடக்கின்றோம்
பார்பதற்கு யாரும் இல்லை
பாலூட்டவும் தாயும் இல்லை
நேற்று வரை அரகில் இருந்த
நேசங்கள் யாரும் இல்லை
பாசம் வைத்து பழகிய
ஆசை சொந்தங்கள் யாரும் இல்லை
ஏன் எமக்கு இந்த வேதனை
இதுவா இந்த உலகத்தின் சாதனை
கண்ணீர் மட்டுமே எங்களின் சொத்தா
கவலைகள மட்டுமே கடவுளின் பரிசா
அழுவது மட்டுமே எங்களின் விதியா
அனைத்துமே அண்டைநாடுகளின் சதியா
எங்கள் துயரங்கள் எப்போது முடியும்
எங்கள் வாழ்வு என்று மலரும்
விடை இல்லா கேள்விகளுடன்
எங்கள் வாழ்வு நீள்கின்றது
விதி விட்ட பாதையிலே
எங்கள் பயணமும் தொடர்கின்றது
!!!!!!!!!!..........ஈழ மைந்தன்