- Back to Home »
- கவிதை »
- புலிகள் ஓய்வதில்லை..
Posted by : தமிழ் வேங்கை

ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன்உயி ரோடுஉள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே
போரில் போராளி தினம்சாகலாம்
போராட் டம்என்றும் சாகாதது
த்ரோகம் எதிரிக்குத் துணைபோகலாம்
துணிவே புலிகட்குத் துணையானது
அண்ணனின் வழிநடத்தால் ஈழம் உறுதியடா
அடையும் விடுதலைக்கு அர்ப்பணம் குருதியடா!
வாழவைப்பான் நாளையந்த
மாமறவன் தாள்பணிவோமே
ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள
வீரன் மாவீரன் பிரபாகரன்
வீணர் நமையாள விரும்பாதவன்
தாகம் தமிழீழம் தானென்றவன்
தாயாய் உருமாறித் துணைநின்றவன்
எதிரியின் ஆயுதத்தால் எதிரியைத் தோற்கடித்தான்
புலிஇவன் போலஎவன் புரட்சிக்குத் தோள்கொடுத்தான்
வீட்டுக்கொரு ஆள்வருவீர்
வென்றெடுப்பேன் ஈழம்என்றானே
ஈழ நிலத்தினிலே புலிகள் களத்தினிலே
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன்உயி ரோடுஉள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே
அகரம் அமுதன்
இன்னுமுண்டு புலி ஓய்வதில்ல -அந்த
சிங்களர்க்கு அச்சம் உள்ளுக்குள்ள –பிர
பாகரன்உயி ரோடுஉள்ளானே –அந்தப்
பாயும் புலி ஈழம்வெல்வானே
போரில் போராளி தினம்சாகலாம்