தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

நான் பிறந்த பொழுதோ கண் கொஞ்சும் அழகு 
ஆனால் இன்றோ நான் காய்ந்து போன சருகு 
என் அன்னை எனக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை 
என் உடலோ வேறு பாலுக்கு ஒத்துழைக்கவும் இல்லை
அதன் விளைவோ என் உடலை கரைத்து கொண்டிருக்கும் கிருமிகள்!
என் நலிந்த உடலில் பல அம்புகள் தோய்த்தது போன்ற உணர்வு
ஆயினும் என் தாய்ப்பாலின் ஏக்கம் என் அன்னைக்கு புரியவில்லை
வாழ்வின் கசப்பை மட்டுமே நான் அனுபவிக்கின்றேன்
தாய்பாலின் சுவை தெரிந்திருந்தால் இனிமையையும் அனுபவித்திருக்க முடியும்!
ஐந்தறிவு விலங்கான பசு கூட தன் கன்றிற்கு தன் பால் கொடுத்து தான் பசி ஆற்றும்
என் பிஞ்சு முகத்தை பார்த்தும் கூட என் அன்னைக்கு தோன்றவில்லை தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று
யாரேனும் உணர்த்துங்கள் என் அன்னைக்கு தாய்ப்பால் "அருமருந்து" என்று!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -