- Back to Home »
- ஈழம் »
- சிங்களவராக பிறந்ததிற்காக வெட்கப்படுகிறேன் – கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ.
Posted by : தமிழ் வேங்கை

இலங்கைக்கு எதிராக தீர்மானம்
கடுமையானதாக இருக்க வேண்டும்.
– கலாநிதி நிமல்கா
இலங்கையில் நடந்த மனித உரிமை
மீறலுக்கும் யுத்தக் குற்றத்திற்குமாக
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள
தீர்மானம்
கடுமையானதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயக்கத்தின் தலைவருமான கலாநிதி நிமல்காபெர்னாண்டோ,
அதேவேளை
சிங்களவராக பிறந்தத்திற்காக வெட்கப்படுகிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த
பேட்டியில், இலங்கை
அரசாங்கம் மனித உரிமை மீறலிலும் யுத்தக்குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளது. இதனை
நிரூபிக்கும் வகையில் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டமை தொடர்பான படங்கள்
வெளிவந்துள்ளன. யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழிர்களை மனிதாபிமான நடவடிக்கையில்
கொன்றதாக அரசு தட்டிக்கழிக்கிறது.
உயிருடன் ஒரு சிறுவனை
பிடித்துக் கொன்றமைக்கு சாட்சியங்கள் உண்டு. சேனல் 4 வீடியோ அனைத்துமே மனித உரிமைகள் மீறல்களுக்கு சாட்சிகளாக
அமையும். இந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும்.
எல்லா நாடுகளும் இலங்கை
அரசாங்கத்தின் தேவைக்காகத்தான் எதிர்ப்பும் ஆதரவும் காட்டுகின்றன. எப்படியான
போதிலும் மனித உரிமைமீறல்கள் யுத்தக்குற்றங்கள் என்பவற்றுக்காக எந்தவொரு நாடும்
அக்கறை கொள்வதாக தெரியவில்லை.
சர்வதேசம் இலங்கைக்கு எதிராக
செயற்படுவதால் தனது முக்கியத்துவத்தை உயர்த்த முடியும். உலக நாடுகளில் தமிழ்
மக்கள் சட்ட விரோதமாக குடியேறுவது முதல் எல்லாப் பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக
அமைவது இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை அமுல்படுத்துவதே ஆகும்.
ஐ.நாவின் விசாரணைகளுக்கு
எதிராகவே பொன்சோ செயற்படுவார். யுத்ததில் பொன்சேகாவுக்கும் முக்கிய பங்குண்டு.
இந்த விடயத்தில் அரசை எதிர்த்தால் இவரும் சிக்கிக்கொள்வார் என்ற நிலையில்
இருந்துதான் பேசுகின்றார். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்காக முன்னாள்
இராணுவத்தளபதி என்ற வகையில் பொன்சேகாவும் பொறுப்புக்கூற வேண்டும்.
தமிழர்களை ஏமாற்ற முடியாது.
இவர்கள் இன்று சர்வதேசத்தின் உதவியுடன் ஜெனிவாவில் உறுதியாகப் போராடுகிறார்கள்.
தற்போது கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்றக்கொள்ளவில்லை.
சர்வதேசம் இலங்கைக்கு ஒரு
சந்தர்பபத்தை வழங்கியுள்ளது. எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஒரு பக்கம் சார்பானது. அதையே
நடைமுறைபடுத்த மாட்டோம் என்கிறது அரசு. அதனால் மேலும் கடுமையான ஒரு தீர்மானத்தை
ஐ.நா கொண்டு வரவேண்டும்.
இந்த விடயத்தில் மனித உரிமை
பேரவைக்கு கையெழுத்திட்ட நாடு என்ற வகையில் இலங்கை பதிலளிக்க வேண்டியது அதன் கடமை.
அரச சார்பற்ற நிறுவனம் என்ற வகையில் சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை அமைத்து அதனுடாக
இலங்கை விசாரிக்கப்பட வேண்டும் என்று நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.