- Back to Home »
- ஈழம் »
- இலங்கையில் இனப்படுகொலை !
Posted by : தமிழ் வேங்கை
போர்க்குற்றம் என்றால் இருநாடுகளுக்குள் நடந்திருக்கவேண்டும்
அப்படியா நடந்தது.
இங்கிலாந்து அரசிடம் இருந்து இலங்கை விடுதலை அடைந்த நாள் முதல்
தமிழர்களை அழிப்பது என்ற முடிவுடன் தமிழ் இனத்தை முற்றிலும் அழிப்பது என்ற
நோக்கத்தோடு சிங்கள அரசுகள் தொடர்ந்து தமிழர்களின் உரிமையை பறிப்பது என்று பல
உரிமைகள் பறிக்கப்பட்டது இதை தட்டிக்கேட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள் இதை பார்த்து பொருக்க முடியாமல் ஈழகாந்தி செல்வநாயகம் போராட்டத்தில் குதித்தார் போராடினார் போராட்டத்திற்கு எந்த மரியாதையும் கொடுக்கவில்லை அதனால் தனி ஈழமே ! தீர்வு என்று அறிவித்தார்
தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழீழத்திற்கான வெற்றி என்று அறிவித்து வாக்கு கேட்கும்போது தமிழ் ஈழத்திற்கான வாக்குகளாக போடுங்கள் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றார் அதனால் இலங்கை அரசு இனப்படுகொலையை அதிகப்படுத்தியது
அதனால்தான் அங்கு இருப்பவர்கள் ஆயுதத்தை எடுத்தார்கள் தம் மக்களை காப்பாற்ற எடுக்கப்படுகின்ற போராட்டமாக மாறியதே தவிர...
சகல பலத்துடன் ,சகல நாட்டின் உதவியுடன் போரில் பயன்படுத்தக்கூடாத ரசாயன ஆயுதம் ,கொத்து குண்டுகள் எல்லாம் போடுகின்றவர்கள் மட்டும் அல்லாமல் சாதாரண மக்கள் வாழும் பகுதி ,மருத்துவமனை என கண்மூடித்தனமாக குண்டு போட்டு மக்களை கொன்ற இலங்கை அரசின் மீது இனப்படுகொலை என்று குற்றம் சாற்றி அதன் அடிப்படையில் ஐநா நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர போர்க்குற்றம் என்று சொல்லி தமிழர்களும் போர் புரிந்தார்கள் என்ற சொத்தை வாதத்தை நிறுத்த வேண்டும்.