- Back to Home »
- தமிழகம் »
- காமராசர் எங்கே..?!
Posted by : தமிழ் வேங்கை

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சன்ஐ சந்திப்பதற்காக
அறிஞர் அண்ணா ஒருமுறை அமெரிக்க சென்றாராம்.. அங்கே பலமணி நேரம் காக்க வைக்கபட்ட
பின்னர் கூட அண்ணாவுக்கு அவரை சந்திக்க அனுமதி
கிடைக்கவில்லையாம். பின்னர் தமிழகம்
திரும்பிவிட்டார்..சில ஆண்டுகள் பின்னர் லிண்டன் ஜோன்சன் இந்தியாவுக்கு விஜயம் செய்தாராம். அவர் சந்திக்க விரும்புபவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்த பெயர் கர்மவீரர் காமராஜர். அப்பொழுது அமரிக்க ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம் எடுக்கவே பல இந்தியத் தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால் காமராஜர் தன்னால் அவரை சந்திக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம்.
எல்லோருக்கும் வியப்பு... ஏன் என்று வினவியபொழுது அவர் சொன்ன பதில் ''ஒரு தமிழனான அண்ணாவைச் சந்திக்காமல் அவமானப்படுதிய அவரைச் சந்திக்க என்னால் முடியாது. ஏன் என்றால் நானும் ஒரு தமிழன்.." என்றாராம். அதனால் தான் காங்கிரஸ்காரர் என்றாலும் அவரைப் பச்சைத் தமிழன் என்று தமிழர்கள் பெருமையாகப் பேசுகின்றர்கள்.
தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொல்வதற்கு துணைபோய், துரோகத்தின் சின்னமாய் விளங்கும் இன்றைய காங்கிரஸ்காரர்கள் எங்கே..?! எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழனை அவமானப்படுத்தியவர்களைச் சந்திக்க மறுத்த காமராசர் எங்கே..?!